பிராண வாயு பெறுவோருக்காக உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநிலத்தில் மருத்துவ தேவைக்காக பிராண வாயு தேவைப்படுவோருக்கு உதவி செய்வதற்காக மாநில அளவிலான தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த உதவிமையம் பெங்களூரு, அரண்மனை சாலையில், இணைப்புக் கட்டடத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நேரில் பிராண வாயு பெற அணுகலாம். இதுதவிர, 080-22262846, 94484 78874 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.