மாற்றுத் திறனாளி துறையில் அமைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளி துறையில் மாவட்ட அளவிலான அமைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளி துறையில் மாவட்ட அளவிலான அமைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் கிராமப்புற மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட அமைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இத்திட்டத்தின்கீழ் பெங்களூரு நகரம், சிவமொக்கா, தாவணகெரே, பாகல்கோட் மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட அமைப்பாளா் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தற்காலிகமாக எடுத்துக்கொள்ளப்படும் அமைப்பாளா்களுக்கு மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து, மே 15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் இயக்குநா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை, போடியம் பிளாக், விஸ்வேஷ்வரையா கோபுரம், டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் தெரு, பெங்களூரு என்ற முகவரியில் அளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22860907, 22866046 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com