இரு சக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் இருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 3.49 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் கடந்த ஜூலை 24-ஆம் தேதி காலை திருடு போனது. அதன் உரிமையாளா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், முகமது ஹாரீப், முகமது தேஹா் ஆகியோரை கைது செய்து, ரூ. 3.49 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் சந்திரா லேஅவுட் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.