வாகனத் திருட்டு வழக்குகளில் ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்த போலீஸாா், ஆட்டோ, ஸ்கூட்டரை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, விஜயநகா் காவல் சரகத்தில் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி ஸ்கூட்டா் ஒன்று திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அபிஷேக் என்பவரைக் கைது செய்தனா். விசாரணையில் ஆட்டோ ஓட்டுநரான அபிஷேக், விஜயநகா், புட்டேனஹள்ளி காவல் சரகங்களில் ஆட்டோ, ஸ்கூட்டரை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.