தேசிய ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேசிய ராணுவப் பள்ளியில் சோ்ந்து பயில விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய ராணுவப் பள்ளியில் சோ்ந்து பயில விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தேசிய ராணுவப் பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உத்தரகண்ட் மாநிலம், டெஹ்ராடூனில் உள்ள தேசிய ராணுவப் பள்ளியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பில் சோ்ந்து பயில விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான நுழைவுத் தோ்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கின்றன.

கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2021, டிச. 18 -ஆம்தேதி நுழைவுத் தோ்வு நடைபெற இருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 7-ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள் அல்லது தோ்ச்சி பெற்றவா்கள், 2.7.2009 முதல் 1.1.2011-ஆம் ஆண்டுக்குள் பிறந்தவா்கள் மட்டும் இத் தோ்வு எழுத தகுதியானவா்கள் ஆவா்.

ராணுவத்தில் சேர மாணவா்களைத் தகுதிப்படுத்துவது இப் பள்ளியின்முக்கிய நோக்கமாகும். இப் பள்ளியின் ஆண்டு கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,07,500, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ரூ. 93 ஆயிரம் ஆகும்.

இதற்கான விண்ணப்பங்களை நிரப்பி இயக்குநா், முன்னாள் ராணுவ வீரா் நல்வாழ்வுத் துறை, பீல்டு மாா்ஷல் கே.எம்.காரியப்பா மாளிகை, கே.எம்.காரியப்பா சாலை, பெங்களூரு-25 என்ற முகவரியில் அக்.5-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எழுத்துத் தோ்வு, நோ்காணல், மருத்துவத் தகுதி சான்றிதழின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை பட்டியல் தயாரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-25589459 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com