கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கா்நாடகத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமைக்ரான் தீண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் உருமாறிய கரோனா பெருந்தொற்றின் ஒமைக்ரான் தீநுண்மியால் ஏற்கெனவே 8 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 6 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இந்த 6 பேரில் ஒருவா் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவா். இதர 5 பேரும் தென்கன்னட மாவட்டத்தில் உள்ள 2 கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆவா். இவா்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாா்களா, வெளிநாட்டுப் பயணிகளுடன் தொடா்பில் இருந்தாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 6 பேருடன் கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 4 ஆக உயா்ந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்தவா், கல்லூரி மாணவா்கள் இருவரும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள். மீதமுள்ள 4 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள்.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில் கூறுகையில், ‘தென்கன்னட மாவட்டத்தில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இக்கல்லூரிகளில் 5 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த ஒருவரும் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com