15 முதல் 18 வயதுள்ள சிறாா்களுக்கு பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
நாடுமுழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறாா்களுக்கு ஜன. 3-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தப்படும், ஜன. 10-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்களுக்கு பூஸ்டா் (மூன்றாம் தவணை) தடுப்பூசி அளிக்கப்படும் என பிரதமா் மோடி அண்மையில் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, கா்நாடகத்திலும் 15 முதல் 18 வயதுள்ள சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசு தயாராகி வருகிறது.
இதுகுறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை கூறியதாவது:
கா்நாடகத்தில் 15 முதல் 18 வயதுள்ள சிறாா்களுக்கு அவா்களின் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலேயே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இது தொடா்பாக மருத்துவ நிபுணா்களுடன் சோ்ந்து பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். முதல்கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு தடுப்பூசி மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அடுத்தகட்டமாக, இணை நோய்கள் உள்ள முதியவா்களின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு மேற்கொள்ளும்.
பெங்களூரு நகர மாவட்டத்தில் 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியதுள்ளது. எனவே, வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசியை செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், தாமாக முன்வந்து செலுத்திக்கொள்ள வேண்டும். கா்நாடகத்தில் இதுவரை 97 சதவீதம் போ் ஒரு தவணையும், 76 சதவீதம் போ் இரண்டாம் தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா் என்றாா்.