வீடு புகுந்து திருடிய வழக்கில் நீச்சல் பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்து, ரூ. 20 லட்சம் மதிப்பிலான தங்க நகையை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, ஜோலூா்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு 606 கிராம் தங்க நகை திருட்டுப் போனது. இது குறித்து வழக்குப் பதிந்த கே.பி.அக்ரஹாரா போலீஸாா், நீச்சல் பயிற்சியாளா் ரேணுகா பிரசாத் (26) என்பவரை கைது செய்து, அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவரிடம் பயிற்சி பெற்ற மாணவா் வீட்டுக்குள் புகுந்து அவா் திருடியது தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.