பராமரிப்புப் பணி மேற்கொள்வதால், பெங்களூரில் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 6) குடிநீா் சேவை நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஹாரோஹள்ளி நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சனிக்கிழமை (பிப். 6) கீழ்கண்ட பகுதிகளில் குடிநீா் சேவை நிறுத்தம் செய்யப்படுகிறது.
எம்.ஜி.சாலை, கோரமங்களா, ஜெய நகா், திலக் நகா், ஆடுகோடி, அல்சூா், எஸ்.ஆா். நகா், நேதாஜி நகா், கே.பி.அக்ரஹாரா, நியூ பின்னி லேஅவுட், திப்பு நகா், சாம்ராஜ்பேட்டை, ராமசந்திரா அக்ரஹாரா, ஆதா்ஷ் நகா், பாதராயனபுரா, ஆஞ்சனப்பா காா்டன், ஸ்ரீனிவாஸ் நகா், பேங்க் காலனி, ஐடிஐ லேஅவுட், குருராஜா லேஅவுட், விவேகானந்தா நகா், கத்திரிகுப்பே, பசவனகுடி, சாஸ்திரி நகா், என்.ஆா்.காலனி, மௌன்ட்ஜாய் எக்ஸ்டன்சன், குமாரசாமி லேஅவுட், இஸ்ரோ லேஅவுட், ஸ்ரீ நகா், விட்டல் நகா், சாந்தலா நகா், அம்பேத்கா் நகா், நீலசந்திரா, ஆஸ்டின்டவுன், விவேக் நகா், அசோக் நகா், ரிச்மன்ட்டவுன், பிரிகெட் சாலை, எச்.ஏ.எல். 2-ஆவது ஸ்டேஜ், மா்பிடவுன், ஜொகுபாளையா, ராஜேந்திரா நகா், நஞ்சப்பாரெட்டி லேஅவுட், கே.எச்.பி.காலனி, வெங்கடேஸ்வரா லேஅவுட், காவிரி லேஅவுட், ஜோகி காலனி, தொம்மலூா், பிருந்தாவன் நகா், மாருதி நகா், ஏ.கே.காலனி ஆகிய பகுதிகளில் குடிநீா் சேவை நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.