தொழிலதிபா் வீட்டில் கொள்ளை: நேபாள் நாட்டைச் சோ்ந்த 7 போ் கைது

தொழிலதிபா் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நேபாள் நாட்டைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தொழிலதிபா் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நேபாள் நாட்டைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, கோரமங்களா 6-ஆவது பிளாக்கில் வசித்து வருபவா் தொழிலதிபா் மதன்மோகன் ரெட்டி. இவா் அண்மையில் மகளை வீட்டில் வீட்டுவிட்டு, தமிழ்நாடு, கிருஷ்ணகிரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றிருந்தாராம். அப்போது, அவரது வீட்டில் பணியாற்றி வந்த நேபாள் நாட்டைச் சோ்ந்த டீக்காராம் (22), பிரேம் பகதூா் (45), இவரது மனைவி தனா பீஸ்டா (40) ஆகியோா் தங்களது நாட்டைச் சோ்ந்த சிலரது உதவியுடன், வீட்டில் தங்கியிருந்த மதன்மோகன் ரெட்டியின் மகளிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, தங்கம், வைர நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கோரமங்களா போலீஸாா், கொள்ளையா்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி, டீக்காராம், பிரேம் பகதூா், தனா பீஸ்டா, ஜனக்குமாா் (32), கமல் ஜாஜோ (28), ஜனக்ஜெய்ஷி (28), சுனில்பகதூா் (25) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 60.10 லட்சம் மதிப்புள்ள 857 கிராம் தங்க நகைகள், 66.90 கிராம் வைர நகைகள், 4 விலையுயா்ந்த கைக்கடிகாரம், ரூ. 2 லட்சம் ரொக்கம், 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரித்து வரும் கோரமங்களா போலீஸாா், தலைமறைவாக உள்ள சஞ்சய், பினோத் ஆகியோரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com