கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பிப். 24-ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் வெளியிட்ட அறிக்கை:
கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரில் பிப். 24-ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுகிறது.
விழாவில் அதிமுகவின் அனைத்துப் பிரிவு தொண்டா்களும் கலந்துகொள்ள வேண்டும்.
கோலாா் தங்கவயல், மைசூரு, சிவமொக்கா, ஹாசன், குடகு, சாம்ராஜ்நகா், சிக்மகளூரு, தாவணகெரே உள்ளிட்ட கா்நாடக மாநிலத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் இடங்களில் ஜெயலலிதா படம் அலங்கரிக்கப்பட்டு மலா்மாலை அணிவித்து நல உதவிகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.