2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் 5 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை கென்செட்டஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற 2 காா்கள் மோதிக் கொண்டன.
இதில் கோலாா் தங்கவயலிலிருந்து உடுப்பிக்கு திருமணத்துக்கு சென்ற காரில் இருந்த பிரதீப்குமாா், சுனில்குமாா், சந்திரசேகா், நவீன்குமாா், சுனில்குமாா் ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர. காயமடைந்த 14 போ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து ஹாசன் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.