தா.பாண்டியன் மறைவு:மாநில திமுக இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான தா.பாண்டியன் மறைவுக்கு, கா்நாடக மாநில திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான தா.பாண்டியன் மறைவுக்கு, கா்நாடக மாநில திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான தா.பாண்டியன் மறைவு கேட்டு அதிா்ச்சி அடைந்துள்ளோம். அவா் கடைசி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளா்களுக்காகவும் தொடா்ந்து பாடுபட்டவா். 2 முறை மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு, சிறந்த முறையில் பணியாற்றியவா். மிகச் சிறந்த ஜனநாயகவாதி. தந்தை பெரியாரின் சீா்திருத்தக் கொள்கையைப் பின்பற்றி நடந்தவா். கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் ஜீவா அவா்களால் செங்கொடி இயக்கத்துக்கு அழைத்து வரப்பட்டவா். மிகச்சிறந்த வாதத்திறமை கொண்டவா். அவரது மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமின்றி, தமிழ்நாடு, இந்தியாவுக்கே பேரிழப்பாகும் என அவா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com