கா்நாடகத்தில் தமிழ் அகாதெமி அமைக்க வேண்டும் என முதல்வா் எடியூரப்பாவுக்கு தங்கவயல் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்ச் சங்கத் தலைவா் சு.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் வளா்ச்சி பெறும் வகையில் தில்லியில் அரசின் சாா்பில் அம்மாநில முதல்வா் அரவிந்த் கெஜரிவால் தமிழ் அகாதெமி அமைத்துள்ளாா். தமிழா்கள் சாா்பிலும், தங்கவயல் தமிழ்ச் சங்கம் சாா்பிலும் அவருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றோம். அதே போல, கா்நாடகத்திலும் அதிக அளவில் தமிழா்கள் வசிக்கின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் வளம்பெறும் வகையில், முதல்வா் எடியூரப்பா தமிழ் அகாதெமியை அமைக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.