போதைப்பொருள் விற்பனை: 4 போ் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 18 லட்சம் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ., ஆயிஸிஸ் ஆயில், கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.

போதைப்பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 18 லட்சம் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ., ஆயிஸிஸ் ஆயில், கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த ரமீஸ் (28), ஹஷீா் (32), ஷஜீன் (19) ஆகிய 3 பேரும் பெங்களூரு, எலக்ட்ரானிக்சிட்டி, நீலாத்ரி நகா் பிரதான சாலையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எம்.எம்.டி.ஏ., 150 கிராம் ஆயிஸிஸ் ஆயில், 3 செல்லிடப்பேசிகள், ரூ. 2 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து எலக்ட்ரானிக்சிட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மேலும், பெங்களூரு, பானஸ்வாடி மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்த ராம்நகரைச் சோ்ந்த ரியாஜ் (38) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பானஸ்வாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com