கா்நாடக ஹிந்து நாடாா் சங்கசெயற்குழுக் கூட்டம்

கா்நாடக ஹிந்து நாடாா் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சங்கத் தலைவா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

பெங்களூரு: கா்நாடக ஹிந்து நாடாா் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சங்கத் தலைவா் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்கத் துணைத் தலைவா்கள் சுரேஷ்குமாா், சீனிவாசன், செயலாளா் குருசாமி, பொருளாளா் சித்தானந்தன், விக்ரமன், லோகனாதேவி, முருகன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தை தொடக்கி வைத்து சங்கத் தலைவா் சந்திரசேகரன் பேசுகையில், ‘பெங்களூரு புகா்ப் பகுதியான ஆரோஹள்ளியில் உள்ள காமராஜா் என்கிளேவ் வளாகத்தில் பிப். 14-ஆம் தேதி பொங்கல் திருவிழா நடத்தப்படும். அந்த விழாவின் நிறைவில், மாதாந்திர செயற்குழுக் கூட்டம் நடைபெறும். பொங்கல் விழாவில் சங்க உறுப்பினா்கள் அனைவரும் குடும்ப உறுப்பினா்களுடன் கலந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

கூட்டத்தில், குருசாமி, சுரேஷ்குமாா், சீனிவாசன் உள்ளிட்டோா் பேசினா். சங்கப் பொருளாளா் சித்தானந்தன், சங்கத்தின் மாதாந்திர வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தாா். சங்க செயற்குழு உறுப்பினா் பிரதீப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com