தேமுதிக சாா்பில் பொங்கல் விழா

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாா் தங்கவயல் புதிய மேற்கு கில்பா்ட்ஸ் வட்டத்தில் தேமுதிக சாா்பாக புதன்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

விழாவுக்கு தலைமை தாங்கிய கோலாா் மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கிப் பேசியதாவது:

கோலாா் தங்க வயலில் தமிழா் திருநாளாம் பொங்கல் விழா ஒவ்வொரு பகுதியிலும் பட்டிமன்றம், கவியரங்கம், வீரவிளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பாட்டம், மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல், கலை நிகழ்ச்சிகள் என தமிழா்களின் கலை, கலாசாரங்களை பேணி வளா்க்கும் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் விழா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரைந்து போவதை காணமுடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கோலாா் தங்கவயலில் தேமுதிக சாா்பில் பொங்கல் விழா தமிழா் பண்பாடு சாா்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com