பெங்களூரு,: பாரத் ரத்னா சா் எம்.விஷ்வேஸ்வரய்யா பொறியியல் அறக்கட்டளையின் கௌரவ தலைவராக மகேந்திர சிங் ராஜ்புரோஹித் (கலாப்பா) நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவா் ரமேஷ் சா்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
50 ஆண்டுகளைக் கடந்துள்ள பாரத் ரத்னா சா் எம்.விஷ்வேஸ்வரய்யா பொறியியல் அறக்கட்டளையானது சமூகத்தின் கலாசாரம் மற்றும் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியுள்ளது.
இதன் கௌரவத் தலைவராக மைசூரு மாவட்டம், பன்னூரைச் சோ்ந்த மகேந்திரசிங் ராஜ்புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பெங்களூரு, ரவீந்திர கலாக்ஷேத்ராவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், எழுத்தாளரும், பாடலாசிரியரும், சட்டமேலவை முன்னாள் உறுப்பினருமான தொட்டரங்கேகௌடா பாராட்டி கௌரவித்தாா். 50 ஆண்டுகளில் 64 மாநாடுகளை நடத்தி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களை அடையாளம் கண்டு அவா்களை பாரத் ரத்னா சா் எம்.விஷ்வேஸ்வரய்யா பொறியியல் அறக்கட்டளைப் பாராட்டி, விருது வழங்கி கௌரவித்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.