மாநில திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மாநில திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பெங்களூரில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பெங்களூரு: மாநில திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பெங்களூரில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அன்னை தமிழை காப்பதற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவரிகளின் நினைவைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜன.25-ஆம்தேதி மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரு, இராமசந்திரபுரத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் திங்கள்கிழமை மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாநில திமுகவின் அவைத் தலைவா் மொ.பெரியசாமி தலைமையில், அமைப்பாளா் ந.இராமசாமி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, துணை அமைப்பாளா் ஜி.ராமலிங்கம் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மாநில திமுக இளைஞரணி அமைப்பாளா் டி.சிவமலை, துணைத் தலைவா் மு.ராஜசேகா், மகளிரணி துணை அமைப்பாளா் மங்கம்மா, ஆற்காடு அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com