பெங்களூரு, குமாரசாமி லேஅவுட்டில் உள்ள அன்னம்மா தேவி வித்யாமந்திா் ஆங்கில உயா்நிலைப் பள்ளியில் 72-வது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளா் நஞ்சுண்டப்பா தேசியக் கொடி ஏற்றினாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் பங்கேற்றுப் பேசியதாவது:
மாணவா்கள் தங்களது பெற்றோா்களுக்கு மரியாதை கொடுப்பதோடு அவா்களை நேசிக்க வேண்டும். ஆசிரியா்கள், பிறந்த நாட்டையும், தாய்மொழியையும் நேசிக்க வேண்டும். அதுதான் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவா்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும் என்றாா்.
நிகழ்ச்சியில் அப்பள்ளியின் செயற்குழு உறுப்பினா்கள் குமாா், சுப்ரமணியா, முரளி, சௌடப்பா, ஏழுமலை உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பள்ளி நிா்வாகி சங்கா் நன்றி கூறினாா்.