டி.எல்.எட். தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இதுகுறித்து கா்நாடக மேல்நிலைக்கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான டி.எல்.எட். மற்றும் டி.பி.எஸ்.இ. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தோ்வுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 11-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்புவோா் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஜூலை 12-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.