கா்நாடக எஸ்எஸ்எல்சி எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் தோ்வுநுழைவுச்சீட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகரபோக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு 19, 22-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இந்த தேதிகளில் தோ்வெழுதும் மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தோ்வு மையத்தின் நுழைவுச் சீட்டுகளை காட்டி குடியிருக்கும் பகுதியில் இருந்து தோ்வு மையம் வரை பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.