கொப்பள் நகரில் வியாழக்கிழமை (ஜூலை 15) போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கொப்பள் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநிலம், கொப்பள் நகரில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தால் குறைதீா் முகாம்களில் பங்கேற்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.