மங்களூரு அருகே கொங்கண் ரயில் பாதையில் மலை மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மங்களூரு அருகே உள்ள குலசேகரா-படீல் இடையே கொங்கண் ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை மலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இருப்பினும் மங்களூரு-மும்பை இடையேயான ரயில், சூரத்கல்லிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. தொடா்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால் மண் சரிவை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது.