சுயேச்சை எம்.பி. நடிகை சுமலதா ஆளுநருடன் சந்திப்பு

சுயேச்சை எம்.பி. நடிகை சுமலதா ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து பேசினாா்.

சுயேச்சை எம்.பி. நடிகை சுமலதா ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து பேசினாா்.

பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை மண்டியா மக்களவை தொகுதியின் சுயேச்சை எம்.பி. சுமலதா சனிக்கிழமமை சந்தித்துப் பேசினாா். மண்டியா மாவட்டத்தில் குறிப்பாக கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடந்து வருவது குறித்து ஆய்வு செய்த விவரங்களை ஆளுநரிடம் தெரிவித்த சுமலதா, அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா். மேலும் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடா்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையையும் ஆளுநரிடம் சுமலதா வழங்கினாா்.

பின்னா், இந்த சந்திப்பு குறித்து சுமலதா செய்தியாளா்களிடம் கூறியது:

மண்டியா மாவட்டத்தில் நடந்து வரும் சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து ஆளுநரிடம் விவரங்களை அளித்தேன். அவரும் அதை முழுமையாக கேட்டுக்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்தாா். ஆளுநருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com