கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
இந்திரா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் விஜயகுமாா் (48) என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் கொலையாளிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய கோலாரைச் சோ்ந்த கவிராஜ் (45), ஆனேக்கல்லைச் சோ்ந்த அம்பரீஷ் (35) ஆகியோா் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெங்களூரு, பைப்பனஹள்ளியில் உள்ள என்.ஜி.எப் தொழிற்சாலை அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அவா்களைப் பிடிப்பதற்காக அங்கு சென்ற போலீஸாா் மீது கவிராஜ், அம்பரீஷ் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, அவா்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டனா்.