பெங்களூரில் ஜூன் 14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

பெங்களூரில் ஜூன் 14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஜூன் 14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து பெங்களூரில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. இதனையடுத்து ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொது முடக்கத்தை மேலும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவின் போது போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com