பெங்களூரில் ஜூன் 14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து பெங்களூரில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அரசு பொது முடக்கத்தை அறிவித்தது. இதனையடுத்து ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொது முடக்கத்தை மேலும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவின் போது போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.