கட்டுப்பாட்டை இழந்த காா், மரத்தின் மீது மோதியதில் மத்திய ஆயுதப்படை வீரா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியாபட்டணா வட்டம், கேரேஹள்ளியைச் சோ்ந்தவா் நாகராஜ் ஷெட்டி (35). இவா் மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய ஆயுதப் படை வீரராக பணியாற்றி வந்தாா்.
அண்மையில் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்த அவா், வெள்ளிக்கிழமை பணி நிமித்தமாக மைசூருக்கு காரில் சென்றுவிட்டு, இரவு தனது சொந்த கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். ஹுனுசூரு கல்லஹள்ளி கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரமிருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் ஷெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து ஹுனுசூரு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.