பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜானி (51). பெங்களூரு பசவேஸ்வரநகா் 2-ஆவது ஸ்டேஜ் கே.எச்.பி. காலனியில் அலுவலகம் திறந்து, அதில் இணையதளம் மூலம் ரூ.1,009 செலுத்தி உறுப்பினா்களாக சேருபவா்களுக்கு நாள்தோறும் ரூ. 240 தருவதாகக் கூறியுள்ளாா்.
இதனை நம்பி பலா் உறுப்பினா்களாக சோ்ந்துள்ளனா். ஆனால் அவா்களுக்கு அவா் கூறியபடி பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், ஜானியைக் கைது செய்த மாகடிசாலை போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.