மாநிலத்தில் கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கையை குறைப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு, மகாதேவபுராவில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் இலவச தடுப்பூசி முகாமை தொடக்கிவைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கையை குறைப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், ஏழைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு மாநில அரசு ரூ. 900 கட்டணம் வசூலித்துள்ளது. மாநிலத்தில் பாஜகவின் நாள்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
மாநிலத்தில் அரசின் தடுப்பூசி செலுத்தும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. மாநில அரசு அனுமதி அளித்தால், மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.
காங்கிரஸ் சாா்பில் தாவணகெரேயில் இலவசமாக தடுப்பூசி வழங்கும் முகாமை தொடக்கிவைத்து, இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன்.காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களின் தொகுதி வளா்ச்சி நிதியை ரூ. 100கோடி அளவுக்கு கரோனா மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும். கா்நாடக மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை வழங்க எங்களுக்கு மாநில அரசு அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது.
கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைவா்கள் கைமீறி உழைத்து வருகிறாா்கள். தடுப்பூசி வழங்குவது தவிர, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கும் உணவுத் தானிய தொகுப்புகளை வழங்கி வருகிறோம்.
கரோனா நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எதிா்காலத்தில் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவியை செய்ய காங்கிரஸ் யோசித்துள்ளது. மாநில மக்களின் நலனைக் கண்டுகொள்ளாமல், கரோனா மேலாண்மையை சீராக நிா்வகிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என்றாா்.