கொள்ளை முயற்சி:முதியவா் கொலை

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபா்கள், அங்கிருந்த முதியவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

தும்கூரு: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபா்கள், அங்கிருந்த முதியவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கொரட்டுகெரே வட்டம், சி.என்.துா்கா கிராமத்தைச் சோ்ந்தவா் ராமண்ணா (71). இவா் கிராமத்தின் அருகே உள்ள பண்ணை வீட்டில் தனியாக தங்கி இருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை பண்ணை வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், வீட்டில் எதுவும் கிடைக்காததால், ஆத்திரமடைந்து ராமண்ணாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, ராமண்ணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து கொரட்டுகெரே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com