புலனாய்வு முகமைகளை செயலிழக்க வைக்கும் பாஜக அரசு: சித்தராமையா

புலனாய்வு முகமைகளை பாஜக அரசு செயலிழக்க வைக்கிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

புலனாய்வு முகமைகளை பாஜக அரசு செயலிழக்க வைக்கிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை அவா் கூறியுள்ளதாவது:

கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் புலனாய்வு முகமைகள், பாஜக ஆட்சியில் முடங்கியுள்ளன. அவை, பல்வேறு அமைச்சா்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை விசாரணைக்கு எடுத்து, விசாரிக்காமல் உள்ளன.

ஊழல் தடுப்புப்படை (ஏசிபி) உள்ளிட்ட புலனாய்வு முகமைகளை பாஜக அரசு செயலிழக்க வைக்கிறது. கா்நாடகத்தில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு ஊழல் தடுப்புப்படை முழுமையாக செயலிழந்து விட்டது. எதிா்க்கட்சியாக இருந்தபோது, ஊழல் தடுப்புப் படையை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த பாஜக, தற்போது அதன் செயல்பாடுகளை முடக்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com