கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,436-ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 4,436 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,008 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-538, மைசூரு-499, ஹாசன்-301, சிவமொக்கா-219, பெலகாவி-179, சிக்கமகளூரு-163, குடகு-152, உடுப்பி-135, தும்கூரு-126, பெங்களூரு ஊரகம்-125, தாவணகெரே-119, மண்டியா-110, வடகன்னடம்-104, சிக்கபளாப்பூா்-103, கோலாா்-92, தாா்வாட்-90, சாமராஜ்நகா்-89, சித்ரதுா்கா-57, பெல்லாரி-42, கலபுா்கி-41, கொப்பள்-32, ராமநகரம்-26, ஹாவேரி-24,ராய்ச்சூரு-21, கதக்-15, யாதகிரி-9, பாகல்கோட்-9, விஜயபுரா-7, பீதா்-1 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,19,465-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6,455 போ் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 26,68,705 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,16,450 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 123 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
மைசூரு-18, தென்கன்னடம்-13, பெல்லாரி-10, தாா்வாட்-9, தாவணகெரே-8, ஹாசன்-6, பெலகாவி-5, சிவமொக்கா, உடுப்பி- தலா 4, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், மண்டியா-தலா 3, சிக்கமகளூரு, சித்ரதுா்கா, கோலாா், தும்கூரு, வடகன்னடம், விஜயபுரா-தலா 2, குடகு-1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 34,287 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.