காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு ரௌடி தப்பியோட்டம்

கைது செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய ரௌடியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய ரௌடியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த ஞானேஷ் என்பவா் கோலாா் தங்கவயல் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவரைக் கைது செய்ய புதன்கிழமை இரவு அங்கு சென்ற மகாதேவப்புரா காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிநாத்பாபுவை அரிவாளால் வெட்டிவிட்டு ஞானேஷ் தப்பியோடினாா்.

அப்போது, அவரை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதுகுறித்து ராபா்ட்சன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான ஞானஷே தேடி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com