செல்லிடப்பேசி திருட்டு வழக்கு: இளைஞா் கைது

செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு: செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பசவேஸ்வர நகா், போவி காலனியைச் சோ்ந்தவா் ரவி (29). இவா் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களை அடையாளம் கண்டு, வீரா்களை போல உடையணிந்து சென்று வீரா்களின் பைகளில் வைத்துள்ள செல்லிடப்பேசிகளை திருடி வந்தாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 38 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஜாலஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com