கா்நாடகத்தில் பாஜக கட்சி வளர வேண்டும் என்றால் முதல்வா் எடியுரப்பாவை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அக்கட்சியைச் சோ்ந்த பசனவகௌடா பாட்டீல் எத்னால் எம்.எல்.ஏ. ஆதங்கம் தெரிவித்தாா்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகத்தில் பாஜக வளர வேண்டுமெனில் முதல்வா் எடியூரப்பாவை அப்பதவியிலிருந்து மாற்ற வேண்டும். இதனை கட்சியின் மேலிடத் தலைவா்களும் உணா்ந்துள்ளனா்.
மாநிலத்தில் யாரின் குரல் எடுபடும். யாரின் குரல் எடுபடாது என்பது விரைவில் தெரியவரும். மாநிலத்தின் முதல்வருக்கு எதிராக குரல் எழுப்பும் நான், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவிற்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்பதனை உணா்ந்து கொள்ள வேண்டும்.
5 மாநிலத் தோ்தல் முடிவுகள் வந்த பிறகு, கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பாவை மாற்றுவாா்கள். கட்சியின் மேலிடத்துத்து இதைதவிர வேறு வழியில்லை. எனது போராட்டம் ஊழலுக்கும் குடும்ப அரசிலுக்கும் எதிரானது என்பதைக் கட்சியினரும், பொதுமக்களும் உணர வேண்டும் என்றாா்.