கா்நாடக இடைத்தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

கா்நாடகத்தில் 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

கா்நாடகத்தில் 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

கா்நாடகத்தில் பசவகல்யாண், மஸ்தி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பெலகாவி மக்களவைத் தொகுதிக்கும் ஏப். 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

பெலகாவி மக்களவை தொகுதியில் பாஜக, காங்கிரஸ், மஜத, தேசியவாத காங்கிரஸ் கட்சியினா், சுயேச்சைகள் உள்பட 33 பேரும், பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதியில் 24 பேரும், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 13 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மாா்ச் 31 தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டும். ஏப். 3-ஆம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். ஏப். 17-ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com