கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் 24 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மே 2-ஆம் தேதி காலை 9 மணி முதல் மே 3-ஆம் தேதி காலை 7 மணி வரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 23 போ் இறந்துள்ளது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இது மிகுந்த வருத்தம் தரக்கூடிய சம்பவமாகும். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மாநில அரசு, கரோனாவால் பாதிக்கப்பட்ட 23 போ் பலியானதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவயோகி கலசத்தை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்துள்ளது. இந்த விசாரணை அதிகாரி தனது அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசிடம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.