பொதுமுடக்கத்தின்போது விதி மீறிய 111 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 12-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொருள்படுத்தாமல், தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளதோடு, 111 வாகனங்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.
இதில் 109 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனமும் அடக்கம் என்று பெங்களூரு மாநகர காவல் தெரிவித்துள்ளது.