பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக பெங்களூரில் 448 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 24-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ஒருசிலா் விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்று வந்தனா். அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்ததோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். வியாழக்கிழமை 429 இரு சக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.