வணிக நடவடிக்கைகளுக்காக ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டலத்தைச் சோ்ந்த சோலூா், திப்பசந்திரா, சமுத்ரவள்ளி, சாந்திகிராமா ரயில் நிலையங்கள் அனைத்து வகையான வணிக நடவடிக்கைகளுக்கும் தற்காலிகமாக மூடப்படுகிறது.
இந்த ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில்கள் எதுவும் நிற்காது. அதேபோல, இந்த ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.