விதிமீறிய 412 வாகனங்கள் பறிமுதல்

பொதுமுடக்கத்தின்போது பெங்களூரில் விதிமீறிய 412 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பொதுமுடக்கத்தின்போது பெங்களூரில் விதிமீறிய 412 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் ஏப். 28 முதல் மே 24-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இக் காலக்கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொது வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பொருள்படுத்தாமல் பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு, 412 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 381 இருசக்கர வாகனங்கள், 13 மூன்று சக்கர வாகனங்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும் என்று பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com