விதிமீறிய 1,075 வாகனங்கள் பறிமுதல்

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பொதுமுடக்க விதிகளை மீறிய 1,075 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பொதுமுடக்க விதிகளை மீறிய 1,075 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைகள் தவிர பொது வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைப் பொருட்படுத்தாமல் பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அத்துடன் 967 இருசக்கர வாகனங்கள், 42 மூன்று சக்கர வாகனங்கள், 66 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,075 வாகனங்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இத்தகவலை பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com