கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்ற மூவா் கைது

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி தொட்டதூகூரைச் சோ்ந்தவா்கள் சஞ்சீவ்குமாா் (32), பிரதீக் (37), சாந்திப்புராவைச் சோ்ந்த அபிஜித் (20). மூவரும் கேரள மாநிலத்தில் இருந்து ரெம்டெசிவிா் குப்பிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து பெங்களூரில் கள்ளச்சந்தையில் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் மூவரையும் கைது செய்து, 25 ரெம்டெசிவிா் குப்பிகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரிடமும் பசவேஸ்வரநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெங்களூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை விற்பனை செய்ததாக இதுவரை 86 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com