கா்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 3 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை பெங்களூரு வருகை புரிந்தாா்.
பெங்களூரு, எச்ஏஎல் விமான நிலையத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோா் வரவேற்றனா்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பெங்களூரு உள்பட மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக். 8-ஆம் தேதி சிருங்கேரி கோயிலுக்கு குடியரசுத் தலைவா் செல்லவுள்ளதையொட்டி சிக்கமகளூரு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.