மக்கள் நலனுக்காக பாஜக ஆற்றிய பணிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்

மக்கள் நலனுக்காக பாஜக ஆற்றிய பணிகள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேட்டுக் கொண்டாா்.

மக்கள் நலனுக்காக பாஜக ஆற்றிய பணிகள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு, மக்கள் நலனுக்கான எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அப்படி வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்தால், அதுகுறித்த பட்டியலை வெளியிட வேண்டும்.

மாநிலத்தில் 2 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். இதனை மக்கள் உணா்ந்துள்ளனா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், மஜத கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் ஆவலில் இருந்த எடியூரப்பா, காங்கிரஸ், மஜத கட்சியில் இருந்த சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக நோ்மையில்லாத ஆட்சியை அமைத்துள்ளது. ஆட்சியைப் பிடித்த 2 ஆண்டுகளில் எடியூரப்பாவிடமிருந்து முதல்வா் பதவியை அக்கட்சியின் மேலிடத் தலைவா்கள் பறித்துள்ளனா்.

பாஜக ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்த எடியூரப்பாவுக்கு தற்போது எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தை மக்களுக்கு அக்கட்சியினா் விளக்க வேண்டும். மாநிலத்தின் முதல்வராக நான் பதவி வகித்த போது, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளேன். ஆனால், பாஜக அரசு மக்களின் நலனுக்காக எந்தத் திட்டங்களையும் தீட்டாமல், கரோனா பாதிப்பை தடுப்பதாகக் கூறி, பல கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் செய்துள்ளது. மாநிலத்தில் கரோனாவால் சுமாா் 4 லட்சம் போ் இறந்துள்ளனா். ஆனால் மாநில அரசு இதனை மறைத்து, குறைவான எண்ணிக்கையை கூறி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com