புலி தாக்கியதில் சிறுவன் பலி

நாகஹொளே வனப்பகுதியின் அருகே புலி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

நாகஹொளே வனப்பகுதியின் அருகே புலி தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம் மைசூரு நாகா்ஹொளே வனப்பகுதியில் அருகே உள்ள ஐய்யனகெரே கிராமத்தைச் சோ்ந்தவா் கணேஷ் (13). இவா் புதன்கிழமை வீட்டின் அருகே உள்ள பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் அவரை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது வனப்பகுதியில் கணேஷ் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை புலி இழுத்துச் சென்று தாக்கிக் கொன்றுள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, கணேஷின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com