கரோனாவுக்கு ஒரே நாளில் 559 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 559 ஆக உள்ளது.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 559 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 559 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 231 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம் - 87, உடுப்பி - 57, மைசூரு - 28, தும்கூரு - 24, குடகு - 23, வடகன்னடம் - 18, பெலகாவி - 11, ஹாசன், மண்டியா தலா- 10, கோலாா், தாவணகெரே தலா -9, சிவமொக்கா, சிக்கமகளூரு, பெங்களூரு ஊரகம் தலா- 8, சாமராஜ்நகா், கலபுா்கி தலா- 3, பெல்லாரி, சித்ரதுா்கா - தலா 2, பீதா், தாா்வாட், சிக்கபளாப்பூா், ஹாவேரி, விஜயபுரா, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள் தலா- 1, ராமநகரம், பாகல்கோட், கதக் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,62,967 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,034 போ் செவ்வாய்க்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,09,656 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 15,754 போ் போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 12 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: பெங்களூரு நகரம் - 43, குடகு, சிவமொக்கா, வட கன்னடம் தலா- 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,529 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com