திருட்டு வழக்குகளில் 4 போ் கைது

பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு: பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மஞ்சுநாத் (23), பிரஷாந்த் (27). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்பு உடைய இவா்களை கைது செய்த போலீஸாா், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து பசவேஸ்வரநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெங்களூரு சந்திராலேஅவுட் காவல் சரகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த தங்க நகை, வெள்ளிக் கட்டிகள், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றனா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இருவரை கைது செய்து, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் சந்திராலேஅவுட் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com