பெங்களூரு: போட்டித் தோ்வுக்கான இலவச தனிப்பயிற்சி வகுப்புகள் அக். 2-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கின்றன.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய பொதுச் சேவை ஆணையம் (யுபிஎஸ்சி), கா்நாடக பொதுப் பணியாளா் தோ்வாணையம் (கேபிஎஸ்சி) போன்ற போட்டித் தோ்வுகளுக்கு பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் போட்டித்தோ்வு தனிப் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சியில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 24-ஆம் தேதிக்குள் மையத்தில் அளிக்க வேண்டும். இதற்கான வகுப்புகள் அக். 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.